வாடகைக்கு குடியிருப்போர் விவரம்: போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு நோட்டீஸ்!
Subscribe to Oneindia Tamil

சென்னையில் வாடகை வீடுகளில் குடியிருப்போர் விவரத்தை, 60 நாட்களில் அருகில் உள்ள காவல்நிலையத்தில் வீட்டின் உரிமையாளர்கள் அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் கடந்த 5ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
அதில், வாடகை வீட்டில் குடியிருப்போர் முழு விவரங்களை கேட்பது அடிப்படை உரிமையை பறிப்பதாகும் என்றும், காவல்துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நான்கு வாரத்தில் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications