கிருஷ்ணராயபுரம் அதிமுக எம்எல்ஏ கீதாவை மீட்க கோரி கணவர் வழக்கு- சசிகலாவுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்!
எம்எல்ஏ கீதாவை மீட்டுத் தர கோரிய வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை: கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதாவின் கணவர் மணிவண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் திங்கள் கிழமைக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சசிகலா தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழக முதல்வர் ஓபிஎஸ் திடீரென, "ராஜினாமாவிற்கு கட்டாயப்படுத்தப்பட்டேன்" என்று பேட்டி அளித்தார். இதனால் மன்னார்குடி கோஷ்டி ஆட்டம் கண்டது. மேலும், சசிகலா முதல்வராகும் கனவிற்கு பலத்த அடி விழுந்தது. இதனால் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு அளித்துவிடப் போகிறார்கள் என்ற அச்சத்தில், எம்எல்ஏக்களை கூவாத்தூரில் உள்ள ரிசார்ட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், தனது மனைவியைக் காணவில்லை என கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதாவின் கணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவரது மனுவில் என் மனைவியின் தந்தை உடல்நலம் சரியில்லாம் வீட்டில் இருக்கிறார் அவருடைய உடல் நலம் குறித்த தகவல் தெரிவிப்பதற்காக கீதாவின் செல்போனில் தொடர்பு கொண்ட போது தொடர்ந்து சுவிச் ஆப் செய்திருப்பதாக சொல்லிக் கொண்டே இருக்கிறது. இதனால் அவசர செய்தியைக் கூட சொல்ல முடியாமல் தவிக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து வரும் திங்கள் கிழமைக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சசிகலாவிற்கும் தமிழக காவல்துறைக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications