தமிழக அரசின் புதிய விதிகள் படி மனைகளை பத்திரப் பதிவு செய்யலாம்.. தடையை தளர்த்தியது ஹைகோர்ட்!
அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டவிதிகளின் படி பத்திரவுப் பதிவு மேற்கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னை: அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டவிதிகளை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதன்படி பத்திர பதிவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீதிமன்றம் தளர்த்தி உத்தரவிட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டன. வீட்டு வசதி வாரிய துறை சார்பில் இரண்டு அரசாணையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி 20-10-16க்கு முன்பு அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் அங்கீகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. விவசாயம் செய்ய ஏற்ற நிலமாக இருந்தால் வீட்டு மனையாக மாற்றக்கூடாது எனவும் தமிழக அரசு கூறியிருந்தது.. அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை ஒழுங்குப்படுத்த புதிய விதிகளும் வெளியிடப்பட்டன.
தொடர்ந்து வேளாண்மை செய்ய ஏற்ற நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றமுடியாது. விவசாய நிலம் இல்லை என்பதற்கு வேளாண் இயக்குனரின் ஒப்புதல் வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஆறு, கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை வீட்டுமனையாக மாற்றக்கூடாது.
கோயில் நிலங்கள், வக்ஃபு வாரிய நிலங்களை வீட்டு மனையாக மாற்றமுடியாது. உரிமம் இல்லாத காலி நிலத்தை வீட்டு மனையாக பதிவு செய்ய அனுமதியில்லை என்பன உள்ளிட்ட பல புதிய விதிகளை தமிழக அரசு குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டவிதிகளை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதன்படி அரசின் புதிய சட்டவிதிகளின் படி பத்திரப்பதிவு செய்துகொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் 2016 அக்டோபர் 20க்கு முன் விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத மனைகளை மறுவிற்பனை செய்யலாம் எனவும், நீதிமன்றம் தடைவிதித்திருந்த காலத்தில் நடைபெற்ற பத்திரப்பதிவுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். தற்போது அனுமதிக்கப்படும் பத்திரப்பதிவுகள் உயர்நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை. மேலும் இதுதொடர்பான வழக்கு ஜூன் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications