வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் சென்னை ஹோட்டல்கள் - புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடு!
சென்னை: சென்னை ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன. வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு ஹோட்டல்கள் ஜொலிக்கின்றன.
இன்றோடு 2014ம் ஆண்டிற்கு விடை கொடுத்து விட்டு, நாளை 2015ம் ஆண்டில் அடி எடுத்து வைக்க உள்ளோம். புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்று நள்ளிரவு முதலே ஆரம்பமாகி விடும்.

சென்னையில் மக்கள் புத்தாண்டுக் கொண்டாட்டங்களைப் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியானதாகவும் கொண்டாடும் வகையில் போலீசார் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க சென்னையில் உள்ள சில பிரபல ஹோட்டல்கள் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. வண்ண வண்ண விளக்குகளால் அந்த ஹோட்டல்கள் அலங்கரிக்கப் பட்டுள்ளன. இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப் பட்டுள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தும் நட்சத்திர ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் ரிசார்ட்டுகளும் காவல் துறை கூறிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது. எனவே, அதற்குத் தகுந்த படி அவை தங்களது கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications