சென்னை இன்போசிஸ் வளாகத்தில் முழங்கால் அளவு நீர்: விடுமுறை அறிவிப்பு
சென்னை: சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள இன்போசிஸ் அலுவலக வளாகத்திற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் இன்று அலுவலகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் பெய்த கனமழையை தாங்க முடியாமல் சென்னை நகரம் திணறியது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.

கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஐ.டி. பார்க்குகளிலும் வெள்ளநீர் புகுந்துள்ளது.
சென்னை இன்போசிஸ் அலுவலக வளாகத்தில் முழங்கால் அளவுக்கு நீர் இருப்பதால் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிண்டியில் உள்ள ஒலிம்பியா டெக் பார்க்கிலும் வெள்ளநீர் புகுந்துள்ளது.
Mad scenes from the Infosys office in Chennai, be safe Chennai #chennairains pic.twitter.com/pY24N3b9hB
— Dhruv kanal (@dhruvkanal) December 1, 2015 இன்போசிஸ் பற்றி அதன் ஊழியர் செல்வா என்பவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
@ChennaiConnect @ChennaiRains @chennaiweather எங்கள் இன்போசிஸ் வளாகம்... விடுமுறை அறிவிப்பு என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications