சென்னை ஐபிஎல் போட்டியில் போலீசை தாக்கியதாக நாம் தமிழர் கட்சியின் மதன் கைது
சென்னையில் ஐபிஎல் போராட்டத்தின்போது போலீஸை தாக்கியதாக நாம் தமிழர் கட்சியின் மதன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை: சென்னை ஐபிஎல் போராட்டத்தின்போது போலீஸை தாக்கியதாக நாம் தமிழர் கட்சியின் மதன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்ளும் வகையில் திட்டம் ஒன்றை அமைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. இதற்கு தமிழகமே கண்டனம் தெரிவித்தது.
மேலும் காவிரிக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் போது ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக் கூடாது என்று கோரிக்கை விடுத்தன. இதை ஐபிஎல் நிர்வாகம் மறுத்துவிட்டது.

இதையடுத்து சென்னையில் ஏப்ரல் 10-ஆம் தேதி நடந்த போட்டியின்போது சென்னை அண்ணா சாலை முழுவதும் நாம் தமிழர் கட்சியினர், தமிழக வாழ்வுரிமை கட்சியினர், பாரதிராஜா உள்ளிட்ட இயக்குநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போட்டி நடைபெற்ற மைதானத்துக்குள் நுழைய முற்பட்ட போராட்டக்காரர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதன் உள்ளிட்டோர் போலீஸாரை கடுமையாக தாக்கிய சம்பவம் அடங்கிய வீடியோ வெளியானது.
இதையடுத்து சீமான் உள்பட அக்கட்சியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த மதனை போலீஸார் இன்று கைது செய்தனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க












Click it and Unblock the Notifications