மீண்டும் கனமழை- வெள்ளத்தில் மிதக்கும் சென்னை புறநகர்கள்.. போக்குவரத்து ஸ்தம்பிப்பு
சென்னை: சென்னை புறநகர்ப் பகுதிகள் மீண்டும் வெள்ளக்காடாகியுள்ளன. விடாமல் வெளுத்து வரும் அடை மழையால் சென்னை புறநகர்களில் உள்ள பல்வேறு பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போயுள்ளது. பல இடங்களில் மின்சாரம் ரத்தாகியுள்ளது.
இரண்டு பெரிய மழையைப் பார்த்து விட்ட சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி மக்கள் இன்னும் அதன் கஷ்டத்திலிருந்தே மீ்ண்டு வராத நிலையில் அடுத்த பெரிய மழை வந்து விட்டது.
முதல் மழையைப் போல இது விடாமல் பெய்து வருவதால் சென்னை நகரமே வெள்ளக்காடாகியுள்ளது. அதேபோல புறநகர்ப் பகுதிகளிலும் வெள்ளக்காடாகியுள்ளது.
|
சாலைகள், தெருக்களில் வெள்ளம்
சாலைகள் தெருக்களில் வெள்ளம் போல நீர் ஓடுகிறது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் மீண்டும் வெள்ளம் புகத் தொடங்கியுள்ளது.

ஜிஎஸ்டி சாலை கடல் போலானது
தாம்பரம் டூ கிண்டி வரையிலான ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. சாலையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரில் ழூழ்கியுள்ளன. கடல் போல தண்ணீர் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

வாகனங்கள் ஸ்தம்பிப்பு
பஸ் போன்ற வாகனங்களையே ஓட்ட முடியாத நிலை. கார் போன்றவற்றை சுத்தமாக ஓட்ட முடியாமல் போனதால் வாகனதாரிகள் பெரும் ஸ்தம்பிக்குள்ளாகியுள்ளனர்.
|
பட்டப் பகலிலும் இருட்டு
ஊரே இரண்டு போய்க் காணப்படுகிறது. நள்ளிரவுக்கு மேல் பெய்யத் தொடங்கிய அடை மழை விடாமல் பெய்து வருவதால் மக்கள் கவலைக்குள்ளாகியுள்ளனர். ஆனாலும் முன்பு பெய்த மழையால் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு அவர்கள் இரவோடு இரவாக ஆயத்த நிலைக்குப் போய் விட்டனர்.
|
மின்சாரம் இல்லை
பல பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்திருப்பதாலும், முழங்கால் வரை தெருக்களில் தண்ணீர் ஓடிக் கொண்டிருப்பதாலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
Accenture offices in OMR and perungalathur @ChennaiRains @Priyamvathap @ChennaiConnect pic.twitter.com/FIZUnoFYyr
— Sailesh Davey (@sailudavey) December 1, 2015 











Click it and Unblock the Notifications