சென்னை முகப்பேரில் மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை முகப்பேரில் 2 ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

சென்னை முகப்பேரை சேர்ந்தவர் முத்தமிழ். இவரது மனைவி ஜெயந்தி. அண்ணாநகர் எல்.ஐ.சி கிளையில் ஜெயந்தி உதவியாளராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் முத்தமிழ். ஸ்பிக் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

இந்த தம்பதிகளின் ஒரே மகன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறான். ஜெயந்தி கடுமையான பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் தவித்துள்ளார். எனவே வேலையை விட்டு நின்று விடுகிறேன் என்று அடிக்கடி கூறி இருக்கிறார். ஆனாலும் சமாதானப்படுத்தி வேலைக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

ஜெயந்தி குடும்பத்தினர் அடுக்குமாடி குடியிருப்பில் 2 ஆவது மாடியில் குடியிருக்கிறார்கள். நேற்று அதிகாலை 5.30 மணியளவில் படுக்கையறையை விட்டு வெளியே வந்த ஜெயந்தி 2 ஆவது மாடியில் இருந்து குதித்தார்.

இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவனை செல்லும் வழியிலேயே ஜெயந்தி பரிதாபமாக இறந்தார்.இது பற்றி நொளம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+