For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓகி புயலால் தமிழகத்தில் அதிக மழை ... டிச.4ல் சென்னையில் மழை

ஓகி புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்துள்ளது. குமரி, நெல்லை மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

    திருநெல்வேலி: ஓகி புயலால் தென் தமிழகத்தில் மழை கொட்டித்தீர்த்துள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    ஓகி புயலின் சீற்றத்தினால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஆறுகள், அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    வடகிழக்குப் பருவமழை ஐந்து சதவிகிதம் அதிகமாகப் பெய்துள்ளது என்றும், இதுவரை தமிழகத்தில் 38 சதவிகித மழை பெய்துள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    ஆறுகளில் வெள்ளம்

    ஆறுகளில் வெள்ளம்

    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்போதெல்லாம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதும், இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்வதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    ஆறுகளில் வெள்ளம்

    ஆறுகளில் வெள்ளம்

    தாமிரபரணி மட்டுமின்றி மற்ற இம்மாவட்டத்தில் உள்ள பச்சையாறு, கடனா நதி, கருப்பா நதி போன்ற ஆறுகளிலும் கருப்பா நதியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் கடையநல்லூர் பகுதியை சூழ்ந்துள்ளது.

    நனைந்த தமிழகம்

    நனைந்த தமிழகம்

    ஓகி புயலுக்கு தென் தமிழகம் மட்டுமல்ல 21 மாவட்டங்கள் நனைந்துள்ளன. நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. அணைகளும் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன.

    இந்திய வானிலை மையம்

    இந்திய வானிலை மையம்

    அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் 4 மற்றும் 5-ம் தேதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    புயல் கரையைக் கடக்கும்

    புயல் கரையைக் கடக்கும்

    அந்தமான் கடல்பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலாக மாறி அது மேலும் வலுபெற்று புயலாக மாற வாய்ப்புள்ளது. ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளது.

    5சதவிகிதம் கூடுதல் மழை

    5சதவிகிதம் கூடுதல் மழை

    வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரை, நவம்பர்1ஆம் தேதி முதல் டிசம்பர்2ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சராசரி அளவைவிட ஐந்து சதவிகித மழை அதிகமாகப் பெய்துள்ளது என்றும், இதுவரை தமிழகத்தில் 38 சதவிகித மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

    English summary
    India Meteorological Department predicted The north Tamil Nadu coast where it will bring moderate to heavy rainfall.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X