உயிர்தப்பினார்.. சசிகலா புஷ்பா பயணித்த விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறால் பரபரப்பு!
எம்பி சசிகலா புஷ்பா பயணித்த விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video

சென்னை: எம்பி சசிகலா புஷ்பா பயணித்த விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக எம்பியான சசிகலா புஷ்பா ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக அதிரடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
ஜெயலலிதா தன்னை அடித்ததாக கூறி நாடாளுமன்றத்தில் பரபரப்பை கிளப்பியவரும் இந்த சசிகலா புஷ்பாதான். இந்நிலையில் நேற்று காலை சென்னையில் இருந்து மதுரை வரை செல்லும் தனியார் விமானத்தில் பயணித்தார்.

80 பயணிகளுடன்
விமானத்தில் சசிகலா புஷ்பா உட்பட 76 பயணிகள் மற்றும் 4 விமான பணிக்குழு பணியாளர்கள் உள்ளிட்ட 80 பேர் பயணம் செய்தனர். விமானம் புறப்படத்தொடங்கி ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தது.

கண்டுபிடித்த விமானி
அப்போது விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனை கண்டுபிடித்த விமானி இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

கோளாறு சரிபார்ப்பு
இதைத்தொடர்ந்து அதிகாரிகளின் உத்தரவின்படி இழுவை வண்டி மூலம் விமானம் இழுக்கப்பட்டு புறப்பட்ட இடத்திலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து பொறியாளர் குழுவினர் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மூன்று மணிநேரம் தாமதம்
பயணிகள் அனைவரும் ஓய்வறையில் தங்கவைக்கப்பட்டனர். சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்து, சுமார் மூன்று மணிநேரம் தாமதமாக விமானம் மீண்டும் புறப்பட்டது.

உயிர்தப்பிய சசிகலாபுஷ்பா
விமானியின் துரித செயல்பாட்டினால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் சசிகலா புஷ்பா உட்பட 80 பேரும் எந்த பாதிப்பும் இன்றி உயிர்தப்பினர்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications