15 வயது மாணவியை பலாத்காரம் செய்த வழக்கு – வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை!
சென்னை: சென்னையில் சிறுமி ஒருவரைக் கற்பழித்து கொலை செய்த வாலிபர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் சம்பத்குமார். வாடகை கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட 15 வயது மாணவி.
இவர், அப்பகுதியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அவரை ஆட்டோவில் சம்பத்குமார் கடத்திச்சென்றார்.
பின்னர் அச்சிறுமியை கிருஷ்ணகிரிக்கு அழைத்துச்சென்று, அங்கு திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை சம்பத்குமார் பலாத்காரம் செய்துள்ளார்.
இதன்பின்னர், அதே ஆண்டு ஆகஸ்டு 19 ஆம் தேதி மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்து வடபழனி அருகே அச்சிறுமியை இறக்கிவிட்ட சம்பத்குமார், அதன்பின்னர் தலைமறைவாகிவிட்டார்.
இதுகுறித்து அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை போலீசார் பலாத்கார சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் கோர்ட்டு நீதிபதி மீனா சதீஷ், "பாலியல் வன்முறை குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், சம்பத்குமாருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூபாய் 20 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்" என்று நேற்று தீர்ப்பளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications