சாலையின் தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்.. 5 பேர் படுகாயம்
சென்னை: திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்த தனியார் ஆம்னி பேருந்து,. கோயம்பேடு அருகே நிலை தடுமாறி தடுப்புச் சுவர் மீது மோதி சாலையின் நடுவே கவிழ்ந்தது.
திருச்சியில் இருந்து, சென்னை நோக்கி நேற்று இரவு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது.
பேருந்து சென்னைக்குள் நுழைந்து, கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த போது, ஈக்காட்டுத்தாங்கல் மேம்பாலம் மீது ஏறி வந்து கொண்டிருந்தது.
அப்போது பேருந்து நிலை தடுமாறி இடதுபக்கம் இருந்த தடுப்புச் சுவர் மீது பயங்கரமாக மோதி சாலையின் நடுவே கவிழ்ந்தது.
அதிகாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததால், உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறினர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தினுள் சிக்கிய பயணிகளை மீட்டனர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 5 பேர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சாலையின் நடுவே பேருந்து கவிழ்ந்ததால், எப்போதும் பிஸியாக இருக்கும் ஈக்காட்டுத்தாங்கல் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பல மணி நேரங்களுக்குப் பிறகே கவிழ்ந்து கிடந்த பேருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
சென்னையின் மிக முக்கிய இடத்தை.. அப்படியே செதுக்க போறாங்க.. களமிறக்கப்பட்ட இரும்பு ராட்சசன்! -
ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு! -
தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம்











Click it and Unblock the Notifications