கதிராமங்கலத்தில் போராட்டம்... சென்னை மெரினாவில் போலீஸ் கெடுபிடி!: வீடியோ
கதிராமங்கலத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தின் எதிரொலியாக சென்னை மெரினாவிலும் போராட்டம் வெடிக்கும் என்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சென்னை: கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சென்னை மெரினாவில் போராட்டம் நடக்கலாம் என அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சி எண்ணெய் நிறுவனம் குழாய் பதித்து எண்ணெய் எடுத்து வருகிறது. இதற்கு கதிராமங்கலம் மக்கள்கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் அங்கு எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. அதை சரிசெய்ய அதிகாரிகள் வந்தனர்.
அவர்களை ஊருக்குள் விடாமல் கதிராமங்கலம் மக்கள் தடுத்து போராட்டம் நடத்தினர்.மேலும், போராடும் மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அதனால் சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்குக்கு கூடியது போல இளைஞர்களும் மக்களும் குவிந்துவிடக்கூடாது என போலீசார் குவிக்கப்பட்டனர்.
மேலும்,போலீசார் அங்கு வரும் வாகனங்களையும் இளைஞர்களையும் கண்காணித்து அனுப்பினர். கதிராமங்கலம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கடந்த சில நாட்களாக வன்முறையை ஏவி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications