பேருந்துகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை.. போலீஸ் 'வார்னிங்'
பேருந்துகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: பேருந்துகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிப்போர் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. அரசு கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் ஒரு நாள் முன்னதாகவே வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் அனைத்து போக்குவரத்து பணிமனைகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பேருந்துகளை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகர போலீசார் எச்சரித்துள்ளனர்.
சட்டம்,ஓழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். சென்னையில் 15000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்னர் என்றும் சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications