கவுரி லங்கேஷ் கொலையை கண்டித்து சென்னை பத்திரிகையாளர்கள் போராட்டம்
பெங்களூரைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து சென்னையில் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video

சென்னை: பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லங்கேஷ் வார இதழின் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ் பெங்களூருவில்
நேற்று மாலை அவரது வீட்டின் கதவை திறந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இவர் இடது சாரி சிந்தனையாளர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை மிகக் கடுமையாக எதிர்த்தவர். சமூக அவலங்கள் குறித்து எழுதிய லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறியும் கவுரியின் கொலையை கண்டித்தும் சென்னை விருந்தினர் மாளிகை அருகே பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பத்திரிக்கையாளர்கள் உயிருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
Protest against #GauriLankeshMurder #GauriLankesh #Chennaipress #Chennaimedia #MediaFreedom pic.twitter.com/CtnxFstGxe
— Mahalingam Ponnusamy (@mahajournalist) September 6, 2017












Click it and Unblock the Notifications