மக்களுக்கு உதவ நினைப்பவர்கள் துணிகளைப் புதிதாக வாங்கி அளியுங்கள்- சுஹாசினி மணிரத்னம்
சென்னை: "மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்ய நினைப்பவர்கள் துணிகளைப் புதிதாக வாங்கி அளியுங்கள்" என்று நடிகை சுஹாசினி கூறியிருக்கிறார்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மக்களும் தொடர்ந்து உதவிகள் செய்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் தாங்கள் பயன்படுத்திய உடைகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்து வருகின்றனர்.
இதனைக் கண்ட நடிகை சுஹாசினி மற்றவர்களுக்கு கண்ணியமாக உதவுங்கள் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

சென்னை மழை
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் நடிக, நடிகையர் தொடர்ந்து உதவிகள் செய்து வருகின்றனர். மக்களுக்குத் தேவையான உணவு, உடை, மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கி அவர்களின் துயர் துடைக்க தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
|
சுஹாசினி - மணிரத்னம்
இதே போன்று சுஹாசினி - மணிரத்னம் தம்பதியரும் தங்களால் முடிந்த உதவிகளை சத்தமில்லாமல் மற்றவர்களுக்கு செய்து வருகின்றனர். உணவு, உடை மட்டுமின்றி அரிசி, மளிகைப்பொருட்கள் என்று ஒரு செட்டாக மக்களுக்கு அளித்து வருகின்றனர்.
|
சுஹாசினி
இந்நிலையில் நடிகை சுஹாசினி கோரிக்கை ஒன்றை பொதுமக்களுக்கு விடுத்திருக்கிறார். "நீங்கள் பயன்படுத்திய உடைகளை மற்றவர்களுக்கு கொடுக்கும் முன்னர் ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள் ரேகா, வாணி கணபதி பயன்படுத்திய உடைகளை நான் அணிந்து இருக்கிறேன். என்னுடைய சகோதரிகள் என்னுடைய பழைய ஜீன்ஸை அணிந்து இருக்கிறார்கள். சான் பிரான்சிஸ்கோவில் இருந்து வரும் ஜெயஸ்ரீயும், உமா பத்மநாபனும் என்னுடைய ஆடைகளை மகிழ்ச்சியுடன் பயன்படுத்தி இருக்கின்றனர்.

தி.நகரில் இருக்கும்
ஆனால் தி.நகரில் இருக்கும் கலையரசியோ, முகப்பேரில் இருக்கும் பொன்மொழியோ என்னுடைய பழைய சேலைகள் மற்றும் உள்ளாடைகளை ஏன் அணிய வேண்டும்?

உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு
நீங்கள் உங்கள் பழைய உடைகளை உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு அளியுங்கள். ஆனால் முன்பின் தெரியாத ஒருவருக்கு கொடுக்காதீர்கள்.உங்கள் பீரோவை சுத்தப்படுத்துவதற்கு இது நேரமல்ல.

120 ரூபாய்
ஒரு புது சேலை மிஞ்சிமிஞ்சிப் போனால் 120 ரூபாய்தான் அதனை வாங்கி மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளியுங்கள். மற்றவர்களுக்கு உதவும்போது கவனமுடனும், கண்ணியத்துடனும் உதவுங்கள் என்று சுஹாசினி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
சுஹாசினியின் இந்த கோரிக்கை நியாயமானது தான் என்று சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
கோடைக்கு நடுவே கொட்டும் குளுகுளு மழை.. இந்த மாவட்டங்களில் ஜில் கிளைமேட் தான்.. வானிலை மையம் அலர்ட் -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications