சென்னைவாசிகளுக்கு நற்செய்தி: இன்று மழை வெளுத்து வாங்குமாம்
சென்னை: வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவில் பலத்த மழை பெய்யக்கூடும்
காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியிருப்பதாவது,
தெற்கு ஆந்திர கடல் பகுதியில் இருந்து குமரி கடல் பகுதி வரை தமிழகத்தின் உள் மாவட்டங்கள் வழியாக நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பசலனத்தால் அடுத்த 24 மணிநேரத்திற்கு வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றனர்.