சென்னையில் கூடுதலாக 130% சதவீதம் மழை பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வழக்கைத்தை விட கூடுதலாக 130 சதவீத மழை பெய்துள்ளது என வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இன்று துவங்கி நாளை காலை 8.30 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் தவிர்த்து பிற கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். தென் மாவட்டங்களில் தொடர்ந்து ஒரு வாரம் மழை பெய்யும்.

Chennai recieves 130% additional rain

சென்னை மாவட்டத்தில் அக்டோபர் முதல் நேற்று வரை 698.4 மிமீ மழை பெய்திருக்க வேண்டும். அதாவது 70 செமீ பெய்திருக்க வேண்டும். ஆனால் நேற்று வரை 161 செமீ மழை பெய்துள்ளது. சென்னையில் கூடுதலாக 130 சதவீதம் மழை பெய்துள்ளது.

மழை பற்றி வானிலை ஆய்வு மைய இயக்குனர் பி.பி. யாதவ் கூறுகையில்,

சென்னை மழை நிலவரம் பற்றி நாங்கள் அவ்வப்போது கணித்து அறிவிப்பு வெளியிடுகிறோம். அடுத்த 72 மணிநேரத்திற்கு சென்னையில் மழை பெய்யாது. சென்னையில் கனமழை பெய்யும் என்று வரும் தகவல்களில் உண்மை இல்லை. இது குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நினைத்து வருத்தமாக உள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+