சென்னையில் விரைவில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது - தமிழ்நாடு வெதர்மேன்
ஓகி புயல் லட்சத்தீவுகள் நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் வேறொரு திசை நோக்கி நகர்வதால் காரைக்கால், கடலூர் பகுதிகளிலும் இன்று மழைக்கு வாய்ப்பிருக்கிறது.
Recommended Video

சென்னை: சென்னையில் விரைவில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. விட்டுவிட்டு மழை பெய்யும். காற்றின் நகர்வைப் பொருத்தே மழை வாய்ப்பு இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார்.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஒகி புயலால் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
ஓகி புயல் தீவிர சூறாவளியாக மாற்றமடைந்து லட்சத்தீவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மையம் கொண்ட புயல்
தென்கிழக்கு அரேபிய கடலில் உள்ள ஒகி புயல், மினிகோயில் இருந்து 110 கி.மீ. வடகிழக்குத் திசையிலும் அமினி திவி தீவில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்குத் திசையிலும் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

புதிய காற்றழுத்தம்
அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்து வரும் தினங்களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அத்துடன் ஓகி புயல் மேலும் வலுப்பெற்று அடுத்த 24 மணிநேரத்துக்குள் தீவிரமடைந்து லட்சத் தீவுப் பகுதியைக் கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன்
இந்நிலையில், இன்று மழை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை ஆர்வலரும் பதிவருமான தமிழ்நாடு வெதர்மேன் கணித்துக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஓகி புயலால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்றும் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக பதிவிட்டுள்ளார்.

மழைக்கு வாய்ப்பு
தூத்துக்குடி, நெல்லையிலும் ஒரு முறை மழை வெளுத்துவாங்கும். அதன் பின்னர் இந்த மூன்று மாவட்டங்களிலுமே மழை படிப்படியாக குறையும். அநேகமாக இன்று பகலில் இந்த மூன்று மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.

நெல்லை மாவட்டத்தில் மழை
பாபநாசம், மணிமுத்தாறு, கொடையாறு, மாஞ்சோலை பகுதிகளில் மிகமிக கனமழை பெய்யலாம்.மேற்கு மாவட்டங்களைப் பொறுத்தவரை திண்டுக்கல், தேனியில் நல்ல மழை வாய்ப்பு இருக்கிறது. தேனியில் பெரியார் பகுதியில் மிக கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது.

உள் மாவட்டங்களில் மழை
ஓகி புயல் லட்சத்தீவுகள் நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் வேறொரு திசை நோக்கி நகர்வதால் காரைக்கால், கடலூர் பகுதிகளிலும் இன்று மழைக்கு வாய்ப்பிருக்கிறது. திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற உள்மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பிருக்கிறது.

சென்னை விரைவில் நனையும்
சென்னையில் விரைவில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. விட்டுவிட்டு மழை பெய்யும். சில நேரங்களில் வெயில்கூட அடிக்கலாம். காற்றின் நகர்வைப் பொருத்தே மழை வாய்ப்பு இருக்கும் என்றும் வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications