சென்னை சில்க்ஸ்சில் இருந்து குபு குபுவென கரும் புகை.. அச்சத்தால் வெளியேறும் தி.நகர் வாசிகள்
இரண்டு நாட்களாக பற்றி எரியும் சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இருந்து வெளி வரும் கரும் புகையால் அப்பார்ட்மெண்ட் வாசிகள் வெளியேறி வருகின்றனர்.
சென்னை: சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இரண்டாவது நாளாக கொழுந்து விட்டு எரிந்து வருவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேறி வருகின்றனர்.
தியாகராயர் நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தீப்பிடித்து எரிந்தது. தீயை அணைக்க 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீரர்கள் போராடினர்.
ஆனாலும் தீ அணைந்தபாடில்லை. கடையின் கண்ணாடி ஜன்னல்கள் வெடித்து சிதறின. கடையின் சுவர்களுக்கு பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட உள்அலங்காரங்கள் என அனைத்தும் உருகின.

கரும்புகை
கட்டடத்தில் இருந்து இரண்டு நாட்களாய் கரும் புகை வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்துள்ளது.

சரிந்து விழுந்த கட்டடம்
புகையை உறிஞ்சும் கருவியை பயன்படுத்தியும் எந்தப் பயனும் இல்லை. கட்டடத்தில் ஏற்பட்ட தீயால் 7வது மாடியிலிருந்து 2வது மாடி வரை இடிந்து விழுந்தன.

எச்சரிக்கை
இதனால் தி. நகர் பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்துள்ளது. குபு குபுவென வெளியேறும் புகையில் மூச்சு திணறல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் அப்பார்ட்மெண்ட் வாசிகள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறுமாறு போலீசார் அறிவுத்தினர்.

வெளியேறும் அப்பார்ட்மெண்ட் வாசிகள்
இதனால் அச்சமுற்ற சென்னை சில்க்ஸ் அருகில் வசிக்கும் அப்பார்மெண்ட் வாசிகள் தியாகராயர் பகுதியில் இருந்து வெளியேறி வருகிறார்கள். கரும் புகை பாதிப்பில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள உறவினர் வீடுகளில் அவர்கள் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியே வெறிச்சோடி காணப்படுகிறது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications