சென்னை சில்க்ஸ் கட்டிட தரை தளத்தில் மீண்டும் தீ- படிப்படியாக சரியும் கட்டிடம்
சென்னை தி.நகரில் தீவிபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் தரைத்தளத்தில் மீண்டும் தீப்பிடித்து எரிவதால் கட்டிடம் படிப்படியாக சரிந்து விழுந்து வருகிறது.
சென்னை தி.நகரில் தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் தரைத்தளத்தில் மீண்டும் தீப்பிடித்து எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடம் படிப்படியாக சரிந்து இடிந்து விழுந்து வருவதால் பொதுமக்களிடையே ஒருவித அச்சம் பரவி வருகிறது.
தி. நகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் 7 மாடிக் கட்டிடத்தில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. கொளுந்துவிட்டு எரிந்த தீயை 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 100க்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு வரப்பட்ட தண்ணீர் மூலம் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்தில் தமிழக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை கட்டிடத்தின் ஒரு பகுதி பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராட்டி கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.

மீண்டும் பற்றி எரியும் தீ
இன்று காலையில் கட்டிடத்தின் முன்பகுதி தீப்பிடித்தது. முன்பகுதியும் துண்டு துண்டாக உடைந்து விழுந்தது. தியாகராய நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை முழுவதும் கரும்புகை பரவி வருவதால், பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
படிப்படியாக உடையும் கட்டிடம்
தீ விபத்தில் கட்டிடத்தின் 7 மாடிகளில் 2வது மாடி வரை இடிந்து விழுந்துள்ளது. ஒட்டுமொத்த கட்டடமும் எந்நேரமும் இடிந்து விழும் அபாயம் உள்ளதால், அப்பகுதி முழுவதும் அபாயகரமான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 29 மணி நேரத்திற்கும் மேலாக கட்டிடம் எரிந்து வருகிறது.
கட்டிடம் முற்றிலும் இடிக்க முடிவு
கட்டிடம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் வெளியேறினர். இந்த நிலையில் கட்டிடத்தின் தரை தளத்தில் மீண்டும் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இதனால் தீயணைப்பு வீரர்கள் மீண்டும் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர். தீயை முற்றிலும் அணைத்த பிறகு அரசு சார்பில் கட்டிடம் இடிக்கப்படும் என்றும் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications