சென்னை சில்க்ஸ் கட்டிட தரை தளத்தில் மீண்டும் தீ- படிப்படியாக சரியும் கட்டிடம்
சென்னை தி.நகரில் தீவிபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் தரைத்தளத்தில் மீண்டும் தீப்பிடித்து எரிவதால் கட்டிடம் படிப்படியாக சரிந்து விழுந்து வருகிறது.
சென்னை தி.நகரில் தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் தரைத்தளத்தில் மீண்டும் தீப்பிடித்து எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடம் படிப்படியாக சரிந்து இடிந்து விழுந்து வருவதால் பொதுமக்களிடையே ஒருவித அச்சம் பரவி வருகிறது.
தி. நகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் 7 மாடிக் கட்டிடத்தில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. கொளுந்துவிட்டு எரிந்த தீயை 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 100க்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு வரப்பட்ட தண்ணீர் மூலம் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்தில் தமிழக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை கட்டிடத்தின் ஒரு பகுதி பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராட்டி கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.

மீண்டும் பற்றி எரியும் தீ
இன்று காலையில் கட்டிடத்தின் முன்பகுதி தீப்பிடித்தது. முன்பகுதியும் துண்டு துண்டாக உடைந்து விழுந்தது. தியாகராய நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை முழுவதும் கரும்புகை பரவி வருவதால், பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
படிப்படியாக உடையும் கட்டிடம்
தீ விபத்தில் கட்டிடத்தின் 7 மாடிகளில் 2வது மாடி வரை இடிந்து விழுந்துள்ளது. ஒட்டுமொத்த கட்டடமும் எந்நேரமும் இடிந்து விழும் அபாயம் உள்ளதால், அப்பகுதி முழுவதும் அபாயகரமான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 29 மணி நேரத்திற்கும் மேலாக கட்டிடம் எரிந்து வருகிறது.
கட்டிடம் முற்றிலும் இடிக்க முடிவு
கட்டிடம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் வெளியேறினர். இந்த நிலையில் கட்டிடத்தின் தரை தளத்தில் மீண்டும் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இதனால் தீயணைப்பு வீரர்கள் மீண்டும் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர். தீயை முற்றிலும் அணைத்த பிறகு அரசு சார்பில் கட்டிடம் இடிக்கப்படும் என்றும் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications