சென்னை சில்க்ஸ் கட்டிட தரை தளத்தில் மீண்டும் தீ- படிப்படியாக சரியும் கட்டிடம்
சென்னை தி.நகரில் தீவிபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் தரைத்தளத்தில் மீண்டும் தீப்பிடித்து எரிவதால் கட்டிடம் படிப்படியாக சரிந்து விழுந்து வருகிறது.
சென்னை தி.நகரில் தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் தரைத்தளத்தில் மீண்டும் தீப்பிடித்து எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடம் படிப்படியாக சரிந்து இடிந்து விழுந்து வருவதால் பொதுமக்களிடையே ஒருவித அச்சம் பரவி வருகிறது.
தி. நகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் 7 மாடிக் கட்டிடத்தில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. கொளுந்துவிட்டு எரிந்த தீயை 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 100க்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு வரப்பட்ட தண்ணீர் மூலம் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்தில் தமிழக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை கட்டிடத்தின் ஒரு பகுதி பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராட்டி கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.

மீண்டும் பற்றி எரியும் தீ
இன்று காலையில் கட்டிடத்தின் முன்பகுதி தீப்பிடித்தது. முன்பகுதியும் துண்டு துண்டாக உடைந்து விழுந்தது. தியாகராய நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை முழுவதும் கரும்புகை பரவி வருவதால், பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
படிப்படியாக உடையும் கட்டிடம்
தீ விபத்தில் கட்டிடத்தின் 7 மாடிகளில் 2வது மாடி வரை இடிந்து விழுந்துள்ளது. ஒட்டுமொத்த கட்டடமும் எந்நேரமும் இடிந்து விழும் அபாயம் உள்ளதால், அப்பகுதி முழுவதும் அபாயகரமான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 29 மணி நேரத்திற்கும் மேலாக கட்டிடம் எரிந்து வருகிறது.
கட்டிடம் முற்றிலும் இடிக்க முடிவு
கட்டிடம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் வெளியேறினர். இந்த நிலையில் கட்டிடத்தின் தரை தளத்தில் மீண்டும் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இதனால் தீயணைப்பு வீரர்கள் மீண்டும் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர். தீயை முற்றிலும் அணைத்த பிறகு அரசு சார்பில் கட்டிடம் இடிக்கப்படும் என்றும் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications