நாளை முதல் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்- சென்னையில் பாதுகாப்பு தீவிரம்
சென்னை: சென்னையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான சிலைகள் நாளை கரைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை நகரில் 2400 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இங்கு பாதுகாப்பு பணியில் 12 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

மூன்று நாட்கள் கரைக்கலாம்:
இந்தச் சிலைகளுக்கு இந்து அமைப்பினரும், பொது மக்களும் பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். சென்னையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை வருகிற 20 ஆம் தேதி, 21ஆம் தேதி, 23 ஆம் தேதி ஆகிய 3 நாட்களில் கரைக்க போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். இதில் பெரும்பாலான சிலைகள் 20 ஆம் தேதியே கரைக்கப்படலாம் என தெரிகிறது.

போலீசார் பாதுகாப்பு:
இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.

ராட்சத கிரேன்கள் வரவழைப்பு:
சிலைகளை கரைப்பதற்காக ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்படுகின்றன. சிலையை கரைக்கும் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அந்த பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

மது அருந்தக் கூடாது:
இரவு நேரத்திலும் சிலை கரைப்பு பணிகள் நடப்பதால் மின் விளக்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மது அருந்தி விட்டு ஊர்வலத்தில் கலந்து கொள்ளக்கூடாது, அனுமதிக்கப்பட்ட சாலையில் மட்டுமே விநாயகர் ஊர்வலம் செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளார்.

போக்குவரத்து மாற்றம்:
சிலை கரைக்கும் நாட்களில் சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சிலை கரைப்பு நாட்களின் போது போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications