வெள்ளத்தால் சென்னை வடபழனி- கோயம்பேடு 100 அடிசாலையில் போக்குவரத்து பாதிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடபழனி - கோயம்பேடு 100 அடி சாலையில் மழை வெள்ள நீர் தேங்கி இருந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த சாலை நேற்று இரவு மூடப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இன்று காலை முதல் அந்த சாலை மீண்டும் திறக்கப்பட்டிருந்தது.

வங்க கடலில் உருவான தாழ்வழுத்தம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்தது. தலைநகர் சென்னையில் விடாது பெய்த மழைக்கு நகரின் பல்வேறு முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமாக தேங்கி நிற்கிறது.

chennai vadapalani to koyambedu 100 ft road closed

இதனால் வாகன ஓட்டிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை வடபழனியில் இருந்து கோயம்பேடு செல்லும் 100 அடி சாலையில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

சாலையில் மழைநீர் அதிகமாக தேங்கி நிற்ன்றதால் வடபழனி 100 அடி சாலை வழியாக செல்லக் கூடிய வாகனங்கள் அனைத்தும் நேற்று இரவு விருகம்பாக்கம் வழியாக கோயம்பேடுக்கு திருப்பி விடப்பட்டன.

கோயம்பேட்டில் இருந்து வடபழனி வரும் சாலையில் எந்த பாதிப்பும் இல்லாததால் கோயம்பேட்டில் இருந்து வாகனங்கள் நேராக வடபழனிக்கு வந்தன. இன்று காலை 100 அடி சாலை மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம் போல வாகனங்கள் செல்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+