சென்னை கலவரம்.. ஏற்கனவே 215 பேர் கைது.. மேலும் 75 பேர் மீது வழக்கு.. தொடரும் பதற்றம்
சென்னை கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி ஏற்கனவே 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 75 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு போடப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்டதாக மேலும் 75 பேர் மீது திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கள் கிழமை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளான நடுகுப்பம், அயோத்தியா குப்பம் அம்பேத்கர் பாலம், ரூதர் நகர், மீர்சாகிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வன்முறைகள் நடந்தேறின. இந்த வன்முறைகளின் போது போலீசாரே ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், குடிசைகளுக்கு தீ வைத்ததாக ஆதாரத்துடன் வீடியோக்கள் வெளியாகின.

ஆனால், இந்த வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி ஏற்கனவே 215 பேரை போலீசார் கைது செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், இன்று ஐஸ் ஹவுஸ் பகுதியில் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி 25 பேரை போலீசார் பிடித்து வழக்கு போட்டுள்ளனர். அதே போன்று ராயப்பேட்டையில் உள்ள மீர்சாகிப் பேட்டையில் நடைபெற்ற வன்முறையில் ஈடுபட்டதாக 50 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த வன்முறையில் ஈடுபடாத பலரை காணவில்லை என்று இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கதறி அழுது வருகின்றனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட பலரும் வன்முறையிலோ அல்லது போராட்டத்திலோ ஈடுபடாதவர்கள் என்ற நிலையில், தற்போது மேலும் 75 பேர் மீது ஐஸ் ஹவுஸ் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications