சென்னை கலவரம்.. ஏற்கனவே 215 பேர் கைது.. மேலும் 75 பேர் மீது வழக்கு.. தொடரும் பதற்றம்
சென்னை கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி ஏற்கனவே 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 75 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு போடப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்டதாக மேலும் 75 பேர் மீது திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கள் கிழமை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளான நடுகுப்பம், அயோத்தியா குப்பம் அம்பேத்கர் பாலம், ரூதர் நகர், மீர்சாகிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வன்முறைகள் நடந்தேறின. இந்த வன்முறைகளின் போது போலீசாரே ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், குடிசைகளுக்கு தீ வைத்ததாக ஆதாரத்துடன் வீடியோக்கள் வெளியாகின.

ஆனால், இந்த வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி ஏற்கனவே 215 பேரை போலீசார் கைது செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், இன்று ஐஸ் ஹவுஸ் பகுதியில் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி 25 பேரை போலீசார் பிடித்து வழக்கு போட்டுள்ளனர். அதே போன்று ராயப்பேட்டையில் உள்ள மீர்சாகிப் பேட்டையில் நடைபெற்ற வன்முறையில் ஈடுபட்டதாக 50 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த வன்முறையில் ஈடுபடாத பலரை காணவில்லை என்று இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கதறி அழுது வருகின்றனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட பலரும் வன்முறையிலோ அல்லது போராட்டத்திலோ ஈடுபடாதவர்கள் என்ற நிலையில், தற்போது மேலும் 75 பேர் மீது ஐஸ் ஹவுஸ் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications