எப்பப் பார்த்தாலும் சந்தேகம்.. சிவபெருமாளை கழுத்தை நெரித்துக் கொலை செய்த சாவித்திரி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடித்து விட்டு வந்து தாறுமாறாக அடிப்பது, நடத்தையில் சந்தேகப்பட்டு திட்டுவது என்று கொடுமைப்படுத்தி வந்த கணவரை கழுத்தை நெரித்துக் கொன்றார் மனைவி. போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

சென்னை மகாகவி பாரதி நகரைச் சேர்ந்தவர் வாட்ச்மேன் சிவபெருமாள். 30 வயதாகும் இவரது மனைவி பெயர் சாவித்திரி. இவர்கலுக்கு 2 மகள்கள் உள்ளனர். நல்ல போதைக்காரர் சிவபெருமாள். வேலை முடிந்ததும் குடித்து விட்டுத்தான் வீட்டுக்கு வருவாராம். வந்தால் மனைவியைப் போட்டு அடித்து உதைப்பது அவரது இரவு நேர பொழுதுபோக்கு போல இருந்தது. சமீப காலமாக வேலைக்கும் போவதில்லையாம். எந்த நேரமும் குடிதானாம்.

Chennai: Wife kills husband after a fight with him

சாவித்திரி ஒரு கடையில் வேலை பாரத்து குடும்பத்தின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து வந்தார். ஆனால் உனக்கு பலருடன் தொடர்பு இருக்கு. கையில் ஏது இவ்வளவு பணம் என்று கேட்டு அடிப்பாராம் சிவபெருமாள். தனது நடத்தையை அடிக்கடி குறை கூறி கணவர் அடித்து உதைத்ததால் மன வேதனையில் இருந்துள்ளார் சாவித்திரி.

இந்த நிலையில் 13ம் தேதி திடீரென இறந்து போனார் சிவபெருமாள். போலீஸார் மர்ம மரணம் என முதலில் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையின்போது சாவித்திரி மீது அவர்களுக்கு சந்தேகம் வலுத்தது. அவரைப் பிடித்து விசாரித்தபோது தான்தான் கணவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டதாக ஒப்புக் கொண்டார் சாவித்திரி.

குடிபோதையில் சண்டை போடுவது, பொறுப்பான குடும்பத் தலைவராக இல்லாமல் ஊதாரித்தனமாக இருந்தது, தனது நடத்தையில் சந்தேகப்பட்டது ஆகியவை தன்னை வெகுவாக பாதித்ததால் கணவரை ஆத்திரத்தில் கொலை செய்து விட்டதாக சாவித்திரி வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதன் பேரில் அவரைக் கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+