மக்கள் குரலுக்கு மதிப்பில்லை.. வரலாற்றில் முதல்முறை இப்படி ஒரு ஐபிஎல் போட்டி.. ஏன் இந்த பிடிவாதம்?
மக்களின் போராட்டத்தையும், எதிர்ப்பையும் மீறி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது.
Recommended Video

சென்னை: மக்களின் போராட்டத்தையும், எதிர்ப்பையும் மீறி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது.
தமிழகம் முழுக்க காவிரி போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்த போராட்டம் காரணமாக ஐபிஎல் போட்டியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை அதிகமாகி உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் நாளை போட்டி நடப்பது உறுதியாகி உள்ளது. ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் கட்டுப்பாடுகள் கூட விதிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கு முன்
இதற்கு முன்பே பல முறை கிரிக்கெட் போட்டிகளின் போது, மக்கள் போராட்டம் காரணமாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அந்த வகையில் சில சமயங்களில் கிரிக்கெட் போட்டிகள் வேறு மைதானத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது. மும்பை குண்டு வெடிப்பின் போது, இந்தியா - இங்கிலாந்து தொடரே ரத்து செய்யப்பட்டது.

பாதுகாப்பு
அதே போல் என்ன விஷயம் நடந்தாலும் கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்புதான் முக்கியம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பல நாட்டு வீரர்கள் விளையாடும் இந்த போட்டியில் அசம்பாவிதம் நடந்தால் அது தேசிய அவமானமாக மாறும். பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் நடக்காமல் இருப்பதற்கு கூட பாதுகாப்பு பிரச்சனைதான் காரணம்.

இங்கே என்ன நடக்கிறது
ஆனால் இங்கே மக்கள் போராட்டத்தை கூட கவனத்தில் கொள்ளாமல் கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. 3000 போலீஸ்கள் இதில் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் 50,000 பேர் அமரக்கூடிய மைதானத்திற்கு 22 பேரை பாதுகாக்க வெறும் 3000 போலீஸ் போதுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வீரர்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பார்கள் என்று கேள்வி உருவாகி உள்ளது.

ஏன் இப்படி
தமிழ்நாடு கிரிக்கெட் வாரியமும், ஐபிஎல் நிர்வாகமும் இந்த போட்டியை கண்டிப்பாக சென்னையில் நடந்த வேண்டும் என்று உறுதியாக கூறியுள்ளது. ஏன் இந்த விஷயத்தில் இரண்டு பேரும் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறார்கள் என்ற காரணம் புரியவில்லை. பிசிசிஐ அமைப்பில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் போது கூட இப்படி ஏன் நடக்கிறது என்ற கேள்வி உருவாகி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications