வேலை பார்த்த இடத்திலேயே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
ராயபுரம்: சென்னையில் பெண் ஒருவர் தான் வேலை பார்த்து வந்த இடத்திலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகள் சண்முகப் பிரியா. 24 வயதான சண்முகப் பிரியா ராயபுரத்தில் உள்ள அச்சக கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், நேற்று திடீரென அவர் வேலை பார்த்த இடத்தில் விஷம் குடித்து மயங்கினார். உடன் வேலை செய்பவர்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி சண்முகப் பிரியா அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே சண்முகப் பிரியாவின் சாவில் மர்மம் இருப்பதாக கூறிய உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ராயபுரம் போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர். இதனையடுத்து அவர்கள் உடலை வாங்கிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications