“பிஞ்சிலே பழுத்த கோழிக்குஞ்சு”- பிறந்து 10 நாட்களில் ”முட்டை”!
திண்டிவனம்: திண்டிவனத்தில் கோழிக் குஞ்சு ஒன்று முட்டையிட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
திண்டிவனத்தை அடுத்த நடுவனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் தங்கத்துரை இவர் ஒரு விவசாயி. கடந்த 10 ஆண்டுகளாக பிராய்லர் இறைச்சி கோழிகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.
கடந்த 1 வாரத்துக்கு முன்பு பெங்களூரில் இருந்து 6 ஆயிரம் பிராய்லர் கோழிக்குஞ்சுகளை லாரியில் கொண்டு வந்து வளர்த்து வருகிறார்.

அதில் பிறந்து சுமார் 10 நாட்களே ஆன அந்த கோழிக்குஞ்சுகளில் ஒன்று முட்டையிட்டது. பொதுவாக பிராய்லர் கோழிகள் இடும் முட்டை சுமார் 60 கிராம் எடையுள்ளதாக காணப்படும்.
ஆனால் இந்த முட்டை 6.5 கிராம் எடையுடன் உள்ளது. இதனையறிந்த நடுவனந்தல் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் திரண்டு வந்து ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர். இதுபற்றி திண்டிவனம் கால்நடை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications