For Daily Alerts
Just In
மழை தொடர்பான விபத்துகளில் இறந்த 19 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்: ஜெயலலிதா
சென்னை: வடகிழக்கு பருவமழை பாதிப்பால் உயிரிழந்த 19 பேரின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியுள்ள முதல்வர் ஜெயலலிதா, அக்குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடலூர் மாவட்டத்தில் உயிரிழந்த 15 பேரின் குடும்பம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கும் தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Comments
English summary
Condolence and relief message of the Chief Minister to the families of the persons who lost their life in different incident.
Story first published: Wednesday, November 11, 2015, 11:36 [IST]