வருமான வரித்துறை சோதனையில் அரசியல் இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
தலைமை செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் நடத்திய வருமான வரித்துறை சோதனையில் அரசியல் எதுவும் இல்லை என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: தலைமை செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமை செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டிலும், அவரது மகன் விவேக் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

மேலும் ராம மோகன ராவின் உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட 13 இடங்களில் சோதனை நடந்தது. இதனையடுத்து, தலைமை செயலகத்தில் உள்ள ராம மோகன ராவ் அறையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பணம், நகைகள், சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக தலைமை செயலாளர் ராமமோகனராவ் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனைக்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதில் அரசியல் எதுவும் இல்லை. வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின்படியே அவர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications