"யாரு சாமி இவன். இவ்ளவு நாளா எங்கே இருந்தான்..??"
சென்னை: பேஸ்புக்கில் பரவி வரும் இந்த வீடியோவைப் பார்க்கும் போது, 'உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாமப் போச்சு' என்று தான் சொல்லத் தோணுகிறது.
இந்த சம்பவம் எந்த நாட்டில் நடந்தது என்று தெரியவில்லை. சிறுவன் ஒருவன் தனது விளையாட்டுக் காரை சாலையில் ஓட்டி விளையாடுகிறான்.
அப்போது தவறான பாதையில் சென்றதாக அவனது காரை போலீஸ் ஒருவர் வழி மறித்து அவனுக்கு பைன் போடுகிறார். பின்னர் அவனது காரை ஓரமாக போய் நிறுத்தச் சொல்கிறார்.
இது நிச்சயமாக நிஜமாக நடந்த சம்பவம் இல்லை என்பது அதன் காட்சிகளைப் பார்க்கும்போதே தெரிகிறது. காரணம் அந்தச் சிறுவனுக்கு வண்டி கூட ஓட்டத் தெரியவில்லை. பின்னாடி இருந்து யாரோ ரிமோட் மூலம் அக்காரை இயக்குகின்றனர்.
ஆனாலும், இந்தக் காட்சி பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கிறது.
தற்போது இந்த வீடியோ பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.