அம்மாவின் சத்துமாத்திரையை சாக்லேட் என்று சாப்பிட்ட குழந்தை பலி- சென்னையில் பரிதாபம்!
சென்னை: சென்னை அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை மிட்டாய் என நினைத்து எடுத்து விழுங்கிய 4 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏழுகிணறு அப்பாசாமி சந்து பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் மனைவி பாளையம். அதே பகுதியில் சந்தோஷ், காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு ரித்திகா என்ற 4 வயது பெண் குழந்தையும், சஞ்சய் என்ற 7 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
பாளையத்திற்கு குழந்தை பிறந்ததையொட்டி, பாளையத்திற்கு சத்து மாத்திரைகளை அரசு மருத்துவமனையில் கொடுத்துள்ளனர். கடந்த 12ம் தேதி வீட்டில் மருந்து, மாத்திரைகளை பாளையம் கீழே வைத்து விட்டு சமையல் செய்ய சென்றுள்ளார்.
அப்போது, விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ரித்திகா அங்கு வைக்கப்பட்டிருந்த மாத்திரையை மிட்டாய் என நினைத்து வாயில் போட்டு விழுங்கி விட்டாள். இதனால் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தாள்.
குழந்தை திடீரென மயங்கி விழுந்ததை பார்த்த தாய் பாளையம் பதறியடித்து கதறினார். உடனே, குழந்தையை தூக்கிக் கொண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமையன்று குழந்தை ரித்திகா பரிதாபமாக இறந்தாள். இதுகுறித்து, ஏழுகிணறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications