வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ஒரு நாள் ஊதியத்தை அளித்த சிஐடியு தொழிலாளர்கள்
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சிஐடியு தொழிலாளர்கள் ஒருநாள் ஊதியம் அளித்து உதவி செய்துள்ளனர்.
இதுகுறித்த அவர்களது அறிக்கையில், "தமிழகத்தில் கடந்த 10 தினங்களாக பெய்து வந்த மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் போன்ற மாவட்டங்களின் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமுற்றுள்ளது. மாநிலம் முழுவதும் மழை வெள்ளத்தால் சுமார் 180 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்த பகுதிகளை சார்ந்த மக்கள் அன்றாட பணிகளை கூட செய்ய முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி போன நிலை ஏற்பட்டுள்ளது. உணவு, குடிநீர் கிடைக்காமலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் மக்கள் சொல்லெணா துயரத்திற்கு ஆளாகினர்.
தொழிலாளர் பணியிடங்களுக்கு செல்ல முடியாத நிலையும், குறிப்பாக முறைசாரா தொழிலாளர்கள் வேலையிழந்தும், ஊதியமிழந்தும் பரிதாப நிலையில் உள்ளனர். தற்போதும் பெரும்பாலான இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இத்தகைய அவல நிலையில் உள்ள மக்களுக்கு தமிழக தொழிலாளி வர்க்கம் நேசக்கரம் நீட்டுவது ஒவ்வொரு தொழிலாளியின் கடமையாகும்.
அந்த வகையில் சிஐடியுவுடன் இணைக்கப்பட்ட சங்கங்களில் உள்ள தொழிலாளர்கள் ஒரு நாள் ஊதியத்தை அளிக்க வேண்டும் என்று சிஐடியு மாநிலக்குழு அறைகூவல் விடுக்கிறது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாத ஊதியம் பெறும் ஒவ்வொரு தொழிலாளியும் தனது ஒருநாள் ஊதியத்தை சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் அளித்து, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த உயரிய பணியை முன்னுரிமை பணியாக கருதி உடனடியாக செயல்படுத்திட வேண்டுமென அனைத்து சங்கங்களையும் சிஐடியு தமிழ் மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications