மழையின் புண்ணியத்தால் கரண்ட் கட்டிலிருந்து தப்பித்த சென்னைவாசிகள்....

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்க சென்னையிலும் நேற்று முதல் சுழற்சிமுறை மின்வெட்டு அமல் படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, குறிப்பிட்ட கால அட்டவணையும் கொடுக்கப்பட்டது. அதில், எந்தெந்த ஏரியாக்களில் எப்பெப்போது மின்தடை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில மாதங்கள் முன்வரை சென்னைவாசிகளுக்கும் இது பழக்கமான ஒன்று தான் என்பதால், அதற்கேற்ற படி தங்களது மக்கள் திட்டமிட்டிருந்தனர்.

City spared of power cuts on day 1 as rain brings respite

ஆனால், சர்ப்பரைஸாக சில ஏரியாக்களுக்கு மட்டும் நேற்று மின்தடை செய்யப்படவில்லை. காரணம், மழை. சென்னையில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, மின்தடை அமல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நேற்றும், இன்றும் கூட சென்னையில் சில இடங்களில் மின்தடை செய்யப்படவில்லை.

வேளச்சேரி, தேனாம்பேட்டை ஏரியாக்களில் இரண்டு மணி நேரம் மின்தடையும், பெரம்பூர் மற்றும் வட சென்னையின் சில பகுதிகளில் ஒரு மணி நேரம் மின்தடை செய்யப்பட்டதாகவும், மந்தைவெளி மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் மின்தடை இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+