பணப்பட்டுவாடா: மதுரையில் அதிமுக பெண் கவுன்சிலர், நிர்வாகி இடையே அடிதடி
Subscribe to Oneindia Tamil
மதுரை: பணப் பட்டுவாடா செய்வது தொடர்பாக மதுரையில் அதிமுகவினர் இடையே அடிதடி ஏற்பட்டது.
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள காமராஜபுரத்தில் இருக்கும் நாடார் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில் வாக்குப்பதிவு துவங்கும் முன்பு அங்கு வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் வழங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
அப்படி பணம் வழங்கியது முறையாக நடக்கவில்லை என்று கூறி அதிமுக வட்டசெயலாளர் போஸ் மற்றும் கவுன்சிலர் சண்முகவள்ளி ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றி அடிதடியில் முடிந்தது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications