மின் வினியோகத்தை துண்டித்து பணப் பட்டுவாடா: அதிமுக, விடுதலை சிறுத்தைகள் இடையே மோதல்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மின் வினியோகத்தை துண்டித்துவிட்டு பணப் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக அதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடக்க உள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் ஆளுங்கட்சியினர் மின்வினியோகத்தை துண்டித்துவிட்டு பணப் பட்டுவாடா செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நெடிமொழியனூரில் சனிக்கிழமை இரவு அதிமுகவினர் மின்வினியோகத்தை துண்டித்துவிட்டு பணப் பட்டுவாடா செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சம்பவ இடத்திற்கு சென்று பணப் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க முயன்றுள்ளனர். இந்த காரணத்தால் அதிமுகவினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications