கலிங்கப்பட்டியில் கலகம்.. வைகோவை விமர்சித்த அதிமுகவினர் மீது சராமரி கல்வீச்சு!
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: மதிமுக பொதுச்செயலரை அவரது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் அதிமுகவினர் விமர்சித்ததால் அங்கு மோதல் மூண்டு பதற்றம் ஏற்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மதிமுக பொதுச்செயலர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியிலும் அதிமுகவினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் போது வைகோவை அதிமுகவினர் தகாத வார்த்தைகளில் விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு ஊர் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இருதரப்பினரிடையே மோதல் மூண்டது. இருதரப்பும் சராமரியாக கல்வீசித் தாக்கினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications