மூதாட்டிக்கு உதவியதில் பிரச்சனை: கரூர் அருகே திமுக, அதிமுகவினர் மோதல்
கரூர்: கரூர் அருகே வாக்களிக்க மூதாட்டிக்கு உதவி செய்ததில் திமுக, அதிமுகவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
கரூர் மண்மங்கலம் அருகே உள்ளது புதுப்பாளையம். இந்த பகுதியில் நேற்று காலை வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்ததே பொது மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வந்திருந்தனர்.
இந்த நிலையில் 70 வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டியை திமுக மகளிர் ஒன்றியச் செயலாளர் லோகாம்பாளுடைய உறவினர் அழைத்து வந்தார். அப்போது அந்த மூதாட்டிக்கு உதவுவதாக கூறிய அந்த நபர், மூதாட்டியின் வாக்கை அவரே பதிவு செய்துவிட்டாராம். இதற்கு அதிமுக ஏஜெண்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக ஏஜெண்டுகளும் கோதாவில் குதித்தனர். இதனால் அங்கு சுமார் 15 நிமிடம் காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிதாசன் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பையும் கலைந்து போகக் கூறி பிரச்சனைக்கு முற்றிப்புள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications