ராஜபாளையம் அருகே அருந்ததியர் குடியிருப்புகளுக்கு தீ வைத்து வெறியாட்டம்- பலர் படுகாயம்!
ராஜபாளையம்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அருந்ததியர் குடியிருப்புகளுக்கு மற்றொரு சமூகத்தினர் தீ வைத்து எரித்து வெறியாட்டம் போட்டுள்ளனர். இதில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே தொட்டியபட்டி கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். குடிநீர் குழாயில் கூடுதல் நேரம் தண்ணீர் பிடித்ததாக கூறி மற்றொரு சமூகத்தினர், அருந்ததியர் குடியிருப்புகளுக்குள் நுழைந்து வெறியாட்டம் போட்டுள்ளனர்.

இதில் பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. பெண்கள், குழந்தைகள் என யாரையும் பார்க்காமல் மிகக் கொடூரமாக மற்றொரு சமூகத்தினர் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் தொட்டியபட்டி கிராமத்துக்கு சென்று பார்வையிட்டு நிலைமைகளை கேட்டறிந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு சமூகத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications