மானாமதுரையில் குருவி பானை தயாரிக்கும் பணி தீவிரம்
மானாமதுரை: மானாமதுரையில் குருவி பானை தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
மானாமதுரை நகரம் மண்பாண்ட பொருட்களுக்கு மிகவும் புகழ் பெற்றது.
சீசனுக்கு ஏற்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்வது மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வழக்கம்.

சீசன் இல்லாத சமயங்களில்
சீசன் இல்லாத சமயங்களில் அலங்காரப் பொருட்களை தயாரிக்கின்றனர். தற்போது வீடுகளில் வளர்க்கப்படும் குருவிகளுக்கு பானை தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

லவ் பேர்ட்ஸ் பானைகள்
வீடுகளில் லவ்பேர்ட்ஸ், கலர் குருவிகள், ஆஸ்திரேலிய கிளிகள் ஆகியவற்றை வளர்ப்பது பலருக்கும் பொழுது போக்காகவே உள்ளது. இந்த குருவிகள் பானைக் கூடுகளில் வசித்து முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும்.

கையகல பானையில்
மானாமதுரையில் கையகல பானையில் குருவி வசிப்பதற்கு ஏற்ற வகையில் பானை தயாரிக்கின்றனர். கலச பானையை விட சற்று சிறிய பானைகளாக தயாரித்து அதில் குருவி நுழையும் அளவிற்கு சிறிய ஓட்டை அமைத்து காயவைத்து வர்ணம் வீட்டி விற்பனை செய்கின்றனர்.

ஒரு பானை பத்து ரூபா
பானை ஒன்று 10 ரூபாயில் இருந்து 25 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். மானாமதுரையில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

காளிமுத்து சொல்வதைக் கேளுங்க...
குருவி பானை தயாரிப்பது குறித்து காளிமுத்து என்பவர் கூறுகையில் செய்களத்தூர், மானம்பாக்கி, கல்குறிச்சி உள்ளிட்ட கிராம கண்மாய்களில் இரும்புச் சத்து அதிகம் இந்த மண்ணில் இருந்துதான் பொருட்களை தயாரிக்கின்றோம். அனைத்து கண்மாய் மண்ணை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து பொருட்கள் தயாரிக்கின்றோம்.

எங்களுக்குத்தேன் தெரியும்...
எந்த பொருட்களுக்கு என்ன விகிதத்தில் கலக்க வேண்டும் என்பது எங்களுக்கு மட்டும்தான் தெரியும் அந்த விகிதத்தில் கலந்து குருவி பாணை தயரிக்கின்றோம்.

திருச்சியிலிருந்து கேப்பாஹ..
எங்களுக்கு பெரும்பாலும் திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில்தான் விற்பனை அதிகளவு ஆகும் அங்கிருந்துதான் வியாபாரிகள் வந்து ஆர்டர் கொடுப்பார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications