கடலில் கலந்த எண்ணெய்யை அகற்ற 10 நாட்கள் பிடிக்கும்.. சட்டசபையில் அமைச்சர் தகவல்

2 கப்பல்கள் மோதிக் கொண்ட விபத்தில் கடல் நீரில் கலந்துள்ள எண்ணெய்யை அகற்ற 10 நாட்கள் பிடிக்கும் என்று சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மீனவர்களுக்கான நிவாரணம் வழங்க ஆலோசனை நடைபெற்று வ

Subscribe to Oneindia Tamil

சென்னை: எண்ணூர் காமராஜர் துறை முகம் அருகே இரு கப்பல்கள் மோதிய விபத்தால் கடல் நீரில் கலந்த கச்சா எண்ணெயை அகற்ற 10 நாட்கள் பிடிக்கும் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த 28ம் தேதி எம்.டி.பி.டபிள்யூ. மேப்பிள் மற்றும் எம்.டி.டான் காஞ்சிபுரம் என்ற இரு கப்பல்கள் நேருக்கு நேர் மோதின. இதில், எம்.டி.டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இதனால் எண்ணூர் முதல் திருவான்மியூர் வரையிலான கடல் பகுதியில் கச்சா எண்ணெய் பரவி வருகின்றன. இதனால் மீன்கள், ஆமைகள் உயிரிழந்துள்ளன.

Clean-up takes 10 days in Sea says, Minister Jayakumar

இதுகுறித்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், எண்ணூர் கடலில் கலந்த கச்சா எண்ணெயை அகற்ற மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது என்று பதில் அளித்தார்.

மேலும், கடல் நீரில் கலந்துள்ள கச்சா எண்ணெய்யை அகற்ற 10 நாட்கள் பிடிக்கும் என்றும் அதுவரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல முடியாமல் மீனவர்கள் பாதிப்படைந்துள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்தார். இந்த 10 நாட்களுக்கான நிவாரணத்தை மீனவர்களுக்கு வழங்குவது பற்றி அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் ஜெயக்குமார் சட்டசபையில் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+