தீபாவளிக்கு மக்களை வாழ்த்தாத "மக்களின் முதல்வர்" ஜெயலலிதா மற்றும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்
சென்னை: மக்களின் முதல்வர் என்று அதிமுகவினரால் அன்புடன் அழைக்கப்படும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தீபாவளியையொட்டி மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்கவில்லை.அதேபோல தமிழக முதல்வரான ஓ.பன்னீர் செல்வமும் வாழ்த்து தெரிவிக்கவில்லை.
தீபாவளி வாழ்த்துகளை இவர்கள் தெரிவி்க்காமல் போனதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
அதேசமயம், ஆளுநர் ரோசய்யா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். ஆனால் வழக்கம் போல திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவிக்கவில்லை.

முதல்வரின் வாழ்த்து மிஸ்ஸி்ங்
வழக்கமாக அனைத்து மத பண்டிகைகளுக்கும் தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவிப்பார். ஆளுநரும், முதல்வரும் தெரிவிக்கும் வாழ்த்துகள்தான் ஊடகங்களில் முதன்மையாக வெளியாகும். மற்ற தலைவர்களின் வாழ்த்தெல்லாம் இவர்களுக்குப் பிறகுதான். ஆனால் இம்முறை முதல்வரின் வாழ்த்து வரவில்லை.

வாழ்த்த மறந்த ஓ.பன்னீர் செல்வம்
ஆயுத பூஜைக்கு ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்திருந்தார். அப்போது ஜெயலலிதா சிறையில் இருந்தார். ஆனால் தீபாவளிக்கு ஜெயலலிதா வெளியில் வந்து விட்டார். ஆனால் பன்னீர் செல்வத்தின் வாழ்த்துதான் வரவில்லை.

ஏன் வாழ்த்தவில்லை
முதல்வர் பன்னீர் செல்வம் ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று தெரியவில்லை. இதற்கான காரணமும் அரசுத் தரப்பில் வெளியிடப்படவில்லை.

ஜெயலலிதாவும் வாழ்த்தவில்லை
அதேபோல அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் வாழ்த்து தெரிவிக்கவில்லை. அவர் வழக்கமாக அனைத்து விதமான பண்டிகைகளுக்கும் தவறாமல்,அழகான வார்த்தைகளோடு கூடிய செய்தியை வெளியிடுவது வழக்கம்.

காரணம் என்னவோ
ஆனால் இந்த இருவருமே தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்காமல் விட்டு விட்டனர். இது மக்கள் மனதில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஆனால் இதற்கான விடையை, விளக்கத்தை இவர்கள்தான் அளிக்க வேண்டும்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications