மேட்டூர் அணை திறக்கல.. டெல்டா விவசாயிகளுக்கு 56.92 கோடி நிதி ஒதுக்கீடு.. முதல்வர் அறிவிப்பு
மேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா விவசாயிகளுக்கு 56.92 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை: டெல்டா விவசாயிகளுக்கு 56.92 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதுள்ள நீரைக் கொண்டு மேட்டூர் அணையை திறக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்தாண்டு குறுவை தொகுப்பு திட்டம் 56.92 ரூபாய் கோடியில் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும், டெல்டா மாவட்டங்களுக்கு இந்தாண்டும் 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகசூலை அதிகரிப்பதற்கு உயிர் உரங்கள் விநியோகிக்க ஏக்கருக்கு 640 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நெற்பயிருக்கு மாற்றாக பயறு வகை சாகுபடி 1.32 லட்சம் ஏக்கர் பரப்பில் மேற்கொள்ளப்படும். பயறு வகைப் பயிர்களின் சாகுபடியை ஊக்கப்படுத்த விதைகளுக்கு ஏக்கருக்கு 980 ரூபாய் வீதம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்ய ஏக்கர் ஒன்றுக்கு 1,200 ரூபாய் என 100 சதவீத மானியம் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications