ஆளுநரை முதல்வர் சந்தித்தது இதற்காகத்தான்!
Recommended Video

சென்னை: ரெட் அலர்ட் எச்சரிக்கை குறித்து விவாதிக்கவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேற்று சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அரசியல் அரங்கமே பரபரப்பாக காணப்பட்டது. ஒரு பக்கம் தினகரன் குரூப் ஏற்படுத்திய கலாட்டாக்கள். அதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலிருந்து ஆற்றிய எதிர்வினைகள். உச்சகட்டமாக ஓ.பி.எஸ்ஸே செய்தியாளர்களைச் சந்தித்து தன்னிலை விளக்கம் கொடுத்து விளக்கினார்.

மறுபக்கம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் புரோஹித்தை சந்தித்துப் பேசினார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. ஏன் இந்த திடீர் சந்திப்பு என்று பரபரப்பும் ஏற்பட்டது. 7 தமிழர் விடுதலை தொடர்பான தீர்மானம் ஆளுநர் மாளிகையில் ஒப்புதலுக்காக காத்துக் கிடக்கிறது. அதேபோல 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவுள்ளது.
இந்த முக்கிய விவகாரங்கள் குறித்து, குறிப்பாக 7 தமிழர் விடுதலை தொடர்பான தீர்மானம் தொடர்பாக முதல்வர் வலியுறுத்துவதற்காக ஆளுநரை சந்தித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்வர் ஆளுநரை சந்தித்தது வேறு காரணத்திற்காக எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி ஆளுநரிடம் முதல்வர் விளக்கினாராம். மேலும், தமிழக ஆளுநராக பொறுப்பேற்று ஒருவருடம் நிறைவடைந்ததை அடுத்து பன்வாரிலால் புரோஹித்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்தும் தெரிவித்துக் கொண்டாராம்.
சந்திப்பின்போது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் உடன் இருந்தார்.












Click it and Unblock the Notifications