ஜெ. மறைவு: திண்டுக்கல் சீனிவாசனின் 'லாவணி கச்சேரி'...முதல்வர் எடப்பாடி கடும் அதிருப்தி
ஜெயலலிதா தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் தொடர் பேட்டிகளால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடர்ச்சியாக அளித்து வரும் பேட்டிகளாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற போது, இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் என நாங்கள் கூறியது அத்தனையுமே பொய். சசிகலா குடும்பத்தினர் பேட்டி அளிக்க சொன்னதையே அளித்தோம்... மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதன் அதிர்வலைகள் ஓய்ந்தபாடில்லை. இது தொடர்பான விவாதம் நீடித்து கொண்டே போகிறது.

இதன் உச்சகட்டமாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டால் அப்போது முதல்வராக இருந்த ஓபிஎஸ் உள்ளிட்டோர்தான் சிக்குவார்கள் என்கிறது தினகரன் தரப்பு. இப்படி தம்மை சுற்றிய சர்ச்சைகள் நீடித்து கொண்டிருப்பதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லையாம்.
இதையடுத்து திண்டுக்கல் சீனிவாசனை அழைத்து இனியும் தொடர்ந்து பேச வேண்டாம் என முதல்வர் எடப்பாடியார் கூறியிருக்கிறார். ஆனால் தாம் பேசியதில் எந்த தவறும் இல்லை. இப்போதுதான் சசிகலா குடும்பத்துக்கு சரியான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் எந்த பிரச்சனையும் வரப் போவதும் இல்லை என திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இந்த விளக்கத்தால் முதல்வர் எடப்பாடியார் திருப்தி அடையவில்லையாம். அதேபோல் மூத்த அமைச்சர்கள் பலரும் திண்டுக்கல் சீனிவாசனின் லாவணி கச்சேரியை ரசிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications