மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு 19ஆம் தேதி முதல் நீர் திறக்க முதல்வர் எடப்பாடியார் உத்தரவு!
மேட்டூர் அணையில் இருந்து வரும் 19 ஆம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: மேட்டூர் அணையில் இருந்து வரும் 19 ஆம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக போதுமான தண்ணீர் இல்லாததால் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.
இந்நிலையில் தென் மேற்கு பருவமழையின் தீவிரத்தால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பியுள்ளன. இதனால் கர்நாடக காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

51.72 டிஎம்சியாக இருப்பு
இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 81 அடியை தாண்டியுள்ளது. அணையில் நீர் இருப்பு 51. 72 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 99000 கனஅடிக்கு மேல் உள்ளது.

19ஆம் மேட்டூர் அணை திறப்பு
இதைத்தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வரும் 19ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் காவிரி படுகையில் உள்ள 700 ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரப்பப்படும்.

நெல், உரங்களை இருப்பு
நீர் நிலைகளை நிரப்பி பாசனத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் சம்பா சாகுபடிக்கு தேவையான நெல், உரங்களை போதிய அளவில் இருப்பில் வைக்கவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

நெல் ரகங்கள்
நீண்ட கால நெல் ரகங்களை சாகுபடி செய்வதற்கு ஏற்ப நெல் ரகங்களை இருப்பில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சசி.ஆர்.1009, சி.ஆர்.1009 சப்1, ஏ.டி.டி.49 போன்ற நெல் ரகங்களை இருப்பு வைக்கவேண்டும் என்றும் முதல்வரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவிடப்பட்டிருப்பது காவிரி டெல்டா விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications