For Quick Alerts
For Daily Alerts
Just In
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளருக்கு ரூ.3.50 லட்சம் முதல்வர் நிதி
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளருக்கு நிதி உதவி அளித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தினகரன் நாளிதழ் புகைப்பட கலைஞர் மாதவனுக்கு ரூ.3 லட்சத்து 50 ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
பத்திரிகையாளர் நல நிதியில் இருந்த இந்த நிதியை அளித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு இன்று தலைமை செயலகத்திற்கு மாதவன் குடும்பத்தினரை வரவழைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாதவன், உணவுக்குழாயில் புற்றுநோய் தாக்குதல் இருந்தது. தனது சிகிச்சைக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிதி உதவி அளித்ததாக மாதவன் கூறினார். முதல்வருக்கு மாதவன் குடும்பத்தினர் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
Comments
English summary
CM Edappadi Palanisamy has given an aid of Ra 3.50 lakh to ailing Journalist Madhavan in Chennai today.
Story first published: Thursday, November 16, 2017, 15:46 [IST]