நியமன எம்எல்ஏக்கள் விவகாரம்: அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை: புதுவை முதல்வர்
நியமன எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்று புதுவை அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video

புதுவை: கிரண்பேடியால் நியமனம் செய்யப்பட்ட 3 நியமன எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும் என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகலை படித்து பார்த்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே நிர்வாக ரீதியில் ஆளுநர் தலையிடுவதாக மோதல்கள் நீடித்தன. இதனால் நியமன எம்எல்ஏக்கள் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில் பாஜகவின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வகணபதி ஆகியோர் பெயரை மத்திய அரசு நியமன எம்எல்ஏக்களுக்கு பரிசீலனை செய்து வந்தது.
இதையடுத்து கிரண்பேடி கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேற்கண்ட மூவரையும் நியமித்தார். இதை எதிர்த்து காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் வழக்கு தொடர்ந்தார்.
இதுகுறித்த இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 3 நியமன எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இதுகுறித்து புதுவை முதல்வர் நாராயணசாமி கூறுகையில், நியமன எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் என்று வழங்கப்பட்ட உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை படிக்க வேண்டும். அதன்பின்னர் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசனை நடத்துவோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications