டோர்னியர் விமான விபத்தில் உயிரிழந்த விமானிகளுக்கு முப்படை சார்பில் இறுதி அஞ்சலி
சென்னை : டோர்னியர் விமான விபத்தில் உயிரிழந்த மூன்று விமானிகளுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) முப்படை சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார்.
இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான டோர்னியர் ரக ‛சிஜி-791' என்ற விமானம் கடந்த ஜூன் 8-ம் தேதி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சிதம்பரம் அருகே கடற்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

அந்த விமானத்தில் வித்யாசாகர், சுபாஷ் சுரேஷ், மற்றும் சோனி ஆகிய மூன்று விமானிகள் பயணம் செய்தனர். 36 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் பிச்சாவரம் கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. மேலும் சில மனித எலும்புகளும் கிடைத்தன.
அந்த எலும்புகள் விமானத்தில் பயணம் செய்த விமானிகளுடையதா என்பதைக் கண்டறிய அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து ரத்த மாதிரி எடுத்து மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவை விமானிகளின் உடல் பாகங்கள் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 3 விமானிகளும் உயிரிழந்து விட்டதாக கடலோர காவல்படை அறிவித்தது.
இறந்த விமானிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பரங்கிமலையில் உள்ள கடலோர காவல்படை விமான தளத்தில் நேற்று நடைபெற்றது. கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய ஐ.ஜி. சர்மா, தென் பிராந்திய ராணுவ தளபதி (பொறுப்பு) ஜக்பீர் சிங் மற்றும் விமானப்படை அதிகாரிகள், தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக கடலோர காவல்படை கூடுதல் டிஜிபி சி.சைலேந்திர பாபு உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இறந்த விமானிகளான சுபாஷ் சுரேஷ், சோனி ஆகியோரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். வித்யாசாகரின் குடும்பத்தினர் வரவில்லை. மீட்கப்பட்ட விமானிகளின் உடல் பாகங்கள் மற்றும் அவர்களது உடமைகள் இந்நிகழ்ச்சியின்போது பெற்றோரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன.
இறந்த விமானிகளின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications