காக்னிஸன்டிற்கு தேர்வாகும் இந்தியர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைகிறது.. அதிர்ச்சி ரிப்போர்ட்
Recommended Video
சென்னை: இந்தியாவில் இருந்து காக்னிஸன்டிற்கு தேர்வாகும் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. 2017ல் 8000 ஆயிரம் பேர் குறைவாக எடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இந்த வருடம் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகம் ஆகும்.
மாறாக மற்ற நாடுகளில் இருந்து காக்னிஸன்டிற்கு அதிகமான நபர்கள் தேர்வாகி இருக்கிறார்கள். முக்கியமாக அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்து அதிகமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
2017
காக்னிஸன்ட் நிறுவனத்திற்கு எல்லா வருடமும் இந்தியாவில் இருந்தே அதிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். 2016ல் தேர்வான 260,200 பேரில் 188,000 பேர் இந்தியர்கள். அதேபோல் 2017ல் தேர்வான 260,000 பேரில் 180,000 பேர் இந்தியர்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது. மீதம் உள்ளவர்கள் ஐரோப்பா, அமெரிக்காவை சேர்ந்தவர்கள்.
இந்தியாவில் குறையும்
ஆனால் இந்த எண்ணிக்கை இந்த வருடம் மிகவும் குறைய இருக்கிறது சென்ற வருடமே 8000 பேர் குறைவாக எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த வருடம் அதைவிட அதிகம் குறைக்கப்படும். இந்த வருட முடிவில் இன்னும் 8000 பேர் குறைவாக எடுக்கப்படலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது.
காரணம் என்ன
இந்தியாவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை ஒரு காரணம் ஆகும். அதே சமயம் தற்போது இந்தியர்களை விட திறமையான பணியாளர்கள் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் கிடைக்கிறார்கள். இதனால் அந்த நிறுவனம் , அந்நாட்டு மக்களை குறிவைத்து வேலை செய்து கொண்டு இருக்கிறது.
அமெரிக்காவில் அதிகரிக்கும்
இதன் காரணமாக அமெரிக்காவில் இந்த நிறுவனத்தில் சேரும் பணியாளர்கள் எண்ணிக்கை அதிகம் ஆக இருக்கிறது. 2900 லிருந்து 50,400வரை எண்ணிக்கை அதிகம் ஆகும். அதேபோல் 2300 பேர் அதிகமாக ஐரோப்பாவில் இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.